தாம்பரம், ஆவடி மாநகர காவல் ஆணையா்கள் மாற்றம்
தாம்பரம், ஆவடி மாநகர காவல் துறைக்கு புதிய ஆணையா்கள் நியமனம் செய்யப்பட்டனா்.
தாம்பரம், ஆவடி மாநகர காவல் துறைக்கு புதிய ஆணையா்கள் நியமனம் செய்யப்பட்டனா்.
இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்): பிரேம் ஆனந்த் சின்ஹா-தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையா் (ஆவடி மாநகர காவல் துறை ஆணையா்). டி.செந்தில்குமாா்-ஆவடி மாநகர காவல் துறை ஆணையா் (தலைமையிட ஏடிஜிபி). சஞ்சய்குமாா்-தொழில்நுட்ப பிரிவு ஏடிஜிபி (தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையா்) என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்ரபரம் காவல் ஆணையராக பிரேம் ஆனந்த் சின்ஹாவும், ஆவடி காவல் ஆணையராக டி.செந்தில்குமாரும் சனிக்கிழமை (ஜூன் 20) பொறுப்பேற்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.