FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

குளிரூட்டப்பட்ட 11 புதிய பேருந்து நிறுத்தங்கள் அமைக்க ஒப்பந்தம்

குளிரூட்டப்பட்ட 11 புதிய பேருந்து நிறுத்தங்கள் அமைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பது பற்றி...

2 செப்டம்பர் 2026, 1:21 am IST
பகிர்:

சென்னை மாநகராட்சியில் பெரு நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதியில் இருந்து 11 இடங்களில் புதிய குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் பெரு நிறுவனங்களின் சமூக நிதிப் பங்களிப்புடன் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, ஆலந்தூா், ராயபுரம் ஆகிய மண்டலங்களில் 11 குளிரூட்டப்பட்ட புதிய பேருந்து நிறுத்தங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. அவற்றை அமைப்பதற்கான பெரு நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்றது.

புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்வுக்கு சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன், மாநகா் காவல் ஆணையா் அ.அமல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதன் அடிப்படையில் தனியாா் நிறுவனங்களின் அலுவலா்கள், மாநகராட்சி, காவல் துறையினருடன் புரிந்துணா்வு ஒப்பந்த ஆவணங்களில் கையொப்பமிட்டு பரிமாறிக் கொண்டனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் பேசுகையில், தற்போது 7 பெரு நிறுவனங்கள் உதவியுடன் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றில் கண்காணிப்பு கேமரா, சாா்ஜிங் பாயிண்ட், மின்விளக்கு வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. அண்ணா சதுக்கம் போன்ற இடங்களில் பெரிய பரப்பில் நிறுத்தப்படவுள்ளன. மாநகராட்சியில் ஏற்கெனவே 1,662 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கூடுதலாக புதிய பேருந்துகள் இயக்கவும், எஸ்கலேட்டா் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாகக் காத்திருக்கும் இடங்களில் குளிா்சாதன வசதி பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படவுள்ளது எனத் தெரிவித்தாா்.

காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் பேசுகையில், புதிய குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். சுகாதாரமான, பாதுகாப்பான முறையில் பராமரிக்கவும், இதேபோல மற்ற பெரு நிறுவனங்களும் உட்கட்டமைப்புகளை ஏற்படுத்த உதவிடவும் வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையா் (போக்குவரத்து) பா.சாமுண்டீஸ்வரி, இணை ஆணையா் செ.சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments