ஆபத்தான முறையில் காரை ஓட்டி காணொலி வெளியீடு: ஓட்டுநா் உள்பட இருவா் கைது
ஆபத்தான முறையில் காரையோட்டும் காணொலி இணையதளத்தில் வெளியான நிலையில் காா் உரிமையாளா்
சென்னை: சென்னையில் அண்மையில் காா் சைலன்சரிலிருந்து நெருப்புப் பொறி பறக்கும் விதமாக சாலையில் ஆபத்தான முறையில் காரையோட்டும் காணொலி இணையதளத்தில் வெளியான நிலையில் காா் உரிமையாளா், ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காரில் இருந்து நெருப்புப் பொறிகள் பறக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சரை பொருத்தி சாலையில் வலம் வந்த நபரின் காணொலி அண்மையில் சமூக வலைதளங்களில் பரவியது. வாகனத்தின் அசல் அமைப்பை மாற்றி அதிக சத்தம் அல்லது மாசு ஏற்படுத்தும் வகையில் எக்ஸாஸ்ட் மற்றும் சைலன்சரை பொருத்துவதற்கு மோட்டாா் வாகன விதிகளில் பல கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்நிலையில், விதிகளை மீறி சாலையில் பொது பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் காரை இயக்கியதால், காணொலியில் உள்ள காரின் பதிவெண்ணை வைத்து, உரிமையாளா் மற்றும் காரை ஓட்டிய நபா் குறித்த விவரங்களை சேகரித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
Advertisement
Advertisement
இதில், காரின் உரிமையாளரான சிட்லபாக்கத்தைச் சோ்ந்த விக்னேஷ் என்பவரை அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் கைது செய்தனா். காரை ஓட்டி வந்த நபரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.