ஸ்ரீபெரும்புதூரில் பலத்த மழை
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென பலத்த மழை பெய்தது.
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென பலத்த மழை பெய்தது.
கடந்த சில தினங்களாக கோடை வெப்பம் அதிகரித்திருந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சுங்குவார்சத்திரம், படப்பை, ஒரகடம் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென பலத்த மழை பெய்தது.
சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. பலத்த மழையால் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.