காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தை சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர் உத்தரப் பிரதேசத்தில் சாவு

DIN

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரத்தை சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர் உத்தரப் பிரதேசத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்தோ-திபெத்தியன் எல்லைப் பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் மாரடைப்பால் காலமான நிலையில், அவரது உடல் வியாழக்கிழமை காஞ்சிபுரம் கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

காஞ்சிபுரம் வடிவேல் நகர் விரிவாக்கப் பகுதியான குமாரசாமி நகரை சேர்ந்தவர் அப்பாண்டை ராஜின் மகன் அ.ரமேஷ்(58). இவர் உத்தரப் பிரதேச மாநிலம் பெரேலி முகாமில் இந்தோ-திபெத்தியன் எல்லைப் பாதுகாப்பு படையில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

இவர் செவ்வாய்க்கிழமை பணியாற்றிய இடத்தில் மாரடைப்பால் காலமானதை தொடர்ந்து, அவரது உடல் ராணுவத்தினரால் பெரேலி முகாமிலிருந்து காஞ்சிபுரத்திற்கு கொண்டு வரப்படுகிறது. வியாழக்கிழமை காலையில் அவரது உடலுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது. இவருக்கு கீதாலெட்சுமி(52) என்ற மனைவியும், வினோத்குமார் (28)என்ற மகனும் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துளிகள்...

மஞ்சள், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்களின் விலை உயா்வு

கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும்: அன்புமணி

கரசேவகா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்கலாமா? உ.பி.யில் அமித் ஷா பிரசாரம்

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT