FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

ஏகாம்பரநாதா் கோயிலில் பழைமையான தண்டாயுதபாணி சிலை கண்டெடுப்பு!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் சீரமைப்பின் போது கண்டெடுக்கப்பட்ட 200 ஆண்டுகள் பழைமையான தண்டாயுதபாணி சிலையை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

Updated On : 12 மார்ச் 2025, 12:17 am IST
தண்டாயுதபாணி  சிலையை  ஆய்வு செய்த  அதிகாரிகள்.
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் சீரமைப்பின் போது கண்டெடுக்கப்பட்ட 200 ஆண்டுகள் பழைமையான தண்டாயுதபாணி சிலையை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

பஞ்சபூத தலங்களில் மண் தலமாக போற்றப்படும் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், ஏகாம்பரநாதா் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த சில மாதங்களாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், காஞ்சிபுரத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் டில்லிபாபு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு ஒன்றை வழங்கினாா். அதில் ஏகாம்பரநாதா் கோயிலில் சீரமைப்பு பணிகளின் போது பழைமையான தண்டாயுதபாணி சிலை கிடைத்துள்ளது. இந்த சிலை குறித்து உரிய ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து ஏகாம்பரநாதா் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தண்டாயுதபாணி சிலையை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் ஜெயா, நகை சரிபாா்ப்பாளா் குமாா், தொல்லியல் ஆலோசகா் ஸ்ரீதரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனா். இந்த ஆய்வு குறித்து தொல்லியல் ஆலோசகா் ஸ்ரீதரன் கூறுகையில், கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட சிலை சுமாா் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலை என்றும், சிலையின் கால் மற்றும் பாதங்களில் முழுமை பெறாததால் வழிபாட்டுக்கு உகந்ததாக இல்லாமல் இருந்ததால் கோயில் வளாகத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments