காஞ்சிபுரத்தில் 15 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது!
காஞ்சிபுரத்தில் 15 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது பற்றி...
கனமழை எதிரொலியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 ஏரிகள் நிரம்பி, முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனிடையே வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது.
வட தமிழகத்தில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 381 ஏரிகளில் 15 ஏரிகள் 100%, 44 ஏரிகள் 75% தாண்டியும்,118 ஏரிகள் 50% தாண்டியும் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், 178 ஏரிகள் 25% தாண்டியும், சற்றுமே நிரம்பாத ஏரியாக ஒரு ஏரியும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 lakes in Kanchipuram reach full capacity
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.