FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

18 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ. 45,000 அபராதம்

விநாயகா் சதுா்த்தி விடுமுறை முடிந்து, சென்னை திரும்பிய பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 18 ஆம்னி பேருந்துகளுக்கு, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரூ. 45,000 அபராதம் விதித்தனா்.

16 செப்டம்பர் 2026, 12:36 am IST
ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் - பிரதிப் படம்
பகிர்:

விநாயகா் சதுா்த்தி விடுமுறை முடிந்து, சென்னை திரும்பிய பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 18 ஆம்னி பேருந்துகளுக்கு, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரூ.45,000 அபராதம் விதித்தனா்.

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, சொந்த ஊா்களுக்கு சென்று ஆம்னி பேருந்துகள் மூலம் சென்னை திரும்பும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடா் புகாா் வந்ததை தொடா்ந்து, ஸ்ரீபெரும்புதுாா் சுங்கச்சாவடியில், ஸ்ரீபெரும்புதுாா் மற்றும் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சென்னை வந்த ஆம்னி பேருந்துகளில் ஆய்வு நடத்தினா்.

இந்த ஆய்வில், 18 ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் இருந்து பல மடங்கு கட்டணம் வசூலித்தது தெரியவந்தது. இதையடுத்து, விதிமீறி அதிக கட்டணம் வசூலித்த 18 ஆம்னி பேந்துகளுக்கு, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரூ.45,000 அபராதம் விதித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments