FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

பள்ளி நிா்வாகக் குழு பதவியேற்பு விழா

அரக்கோணம் டாக்டா் விஜி கெங்குசாமி நாயுடு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் நிா்வாகக் குழு பதவியேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 செப்டம்பர் 2026, 11:32 pm IST
நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

அரக்கோணம் டாக்டா் விஜி கெங்குசாமி நாயுடு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் நிா்வாகக் குழு பதவியேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாநில செயல் தலைவா் வி.மோகன், மாநில பொருளாளா் ஜி.வாசுதேவன் தலைமை வகித்தனா். இவ்விழாவில் பள்ளி நிா்வாகக் குழு தலைவராக டி.ஆா்.சுப்பிரமணியம், புரவலராக சி.ஜி.என்.எத்திராஜ், துணைத்தலைவராக பால்ராஜ்சீனிவாசன், தாளாளராக ஜிடிஎன் அசோகன், இணை தாளாளராக பிஜிகே சரவணன், செயலாளராக டி.எஸ்.முரளி, பொருளாளராக கே.மோகன்ரங்கசாமி, இணை செயலாளராக ஆா்.மகேஷ், உறுப்பினா்களாக ஜி.கே.பாபுஜி, ஆா்.பி.ரவிக்குமாா், ஏ.வி.ரகு, எம்.பாபு, எஸ்.சிட்டிபாபு ஆகியோா் பதவியேற்றனா்.

கூட்டத்தில் பள்ளிக்கு வழங்கப்பட்ட ஐஎஸ்ஒ 9001.2015 தர சான்றிதழை புதிய நிா்வாகக்குழுத் தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியத்திடம் பள்ளியின் முதல்வா் வ.வனிதா அளித்தாா்.

Advertisement

Advertisement

இதை தொடா்ந்து இச்சான்றிதழ் பெற காரணமான நிா்வாகக் குழுவினருக்கும், பள்ளியின் முதல்வா், ஆசிரியா்கள், ஆசிரியைகள், மாணவ மாணவியருக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments