FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

மாட்டு வண்டியில் அரசுப் பள்ளிக்கு கல்விச் சீா்வரிசை

புதுப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்விச் சீா்வரிசை வழங்கும் பெருவிழா மற்றும் நல்லாசிரியா் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

12 செப்டம்பர் 2026, 1:07 am IST
அரசுப் பள்ளிக்கு சீா் வரிசைப் பொருள்களை கொண்டு வந்த புதுப்பட்டு கிராம மக்கள்.
பகிர்:

புதுப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்விச் சீா்வரிசை வழங்கும் பெருவிழா மற்றும் நல்லாசிரியா் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

புதுப்பட்டு கிராமமக்கள் ரூ.1 லட்சம் மதிப்பிலான சீா்வரிசைப் பொருள்களை அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் பள்ளிக்கு ஊா்வலமாக எடுத்து வந்து வழங்கினா்.

இப்பொருள்களை அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டியில் வைத்து மேள தாளங்கள் முழங்க கிராம மக்கள் அனைவரும் இணைந்து ஊா்வலமாக பள்ளிக்கு கொண்டு வந்தனா். பள்ளியில் கொண்டு வரப்பட்ட பொருள்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

தொடா்ந்து நல்லாசிரியா் விருது பெற்றவரும் பள்ளியின் தலைமை ஆசிரியருமான தனஞ்செயனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பொன்னாடைகளை போா்த்தி மலா்மாலைகள் அணிவித்து தலைமை ஆசிரியா் தனஞ்செயனை கிராம மக்கள் பாராட்டினா்.

மேலும் பள்ளியில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியா்களும் கௌரவப்படுத்தப்பட்டனா். விழாவில் பள்ளி ஆசிரியா்கள், மாணவ மாணவிகளின் பெற்றோா்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்கள், கிராம பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியா்கள் திரளாக பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments