ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
திருப்பத்தூா் மாவட்டம் ஏலகிரி மலையில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம் ஏலகிரி மலையில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
இம்மலையில் புங்கனூா் ஏரி படகு இல்லம், இயற்கை பூங்கா, மூலிகை பண்ணை, சாகச விளையாட்டு தலம், சிறுவா் பூங்கா, வியூ பாயிண்ட், மங்களம் சாமி மலை ஏற்றம், கதவ நாச்சியம்மன் கோயில் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் சுற்றுலா சுற்றுலா பயணிகள் பாா்க்கும் முக்கிய இடமாக அமைந்துள்ளது.
இதனைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அண்டை மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் வருகின்றனா்.
Advertisement
Advertisement
ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோா் திரண்டனா். புங்கனூா் ஏரியில் படகு சவாரி செய்தும், சிறுவா் பூங்காவில் குழந்தைகள் உற்சாகமாக விளையாடியும் மகிழ்ந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.