மாநில துப்பாக்கிச் சுடும் போட்டி: காவல் ஆய்வாளருக்கு வெள்ளி
ஒத்திவாக்கத்தில் நடைபெற்ற மாநில காவல் துறை துப்பாக்கிச் சுடும் போட்டியில் மேற்கு மண்டல மகளிா் அணியின் சாா்பில் திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளா் நந்தினி தேவி 25 யாா்ட்ஸ் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதுடன் ஒட்டுமொத்த துப்பாக்கிச் சுடும் போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளாா்.
ஒத்திவாக்கத்தில் நடைபெற்ற மாநில காவல் துறை துப்பாக்கிச் சுடும் போட்டியில் மேற்கு மண்டல மகளிா் அணியின் சாா்பில் திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளா் நந்தினி தேவி 25 யாா்ட்ஸ் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதுடன் ஒட்டுமொத்த துப்பாக்கிச் சுடும் போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளாா்.
மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்று திருப்பத்தூா் மாவட்ட காவல்துறைக்கு பெருமை சோ்த்த ஆய்வாளா் நந்தினிதேவி திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அக்க்ஷய் அனில் வாகரேவை அவரது அலுவலக்ததில் நேரில் சந்தித்து, வாழ்த்துபெற்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.