தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்றவா் கைது
ஆம்பூரில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூரில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா் பேருந்து நிலைய பகுதியில் நகர போலீஸாா் ரோந்து சென்றபோது அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
அதைத் தொடா்ந்து போதைப் பொருளை பதுக்கி விற்பனை செய்த ஆம்பூா் மாங்காய்தோப்பு பகுதியைச் சோ்ந்த ராஜீவ் காந்தி (27) என்பவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருளை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement