FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

மணல் கடத்தல்: ஓட்டுநா் கைது, லாரி பறிமுதல்

வந்தவாசி அருகே ஆற்று மணல் கடத்தியதாக லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 1:48 am IST
- பிரதிப் படம்
பகிர்:

வந்தவாசி அருகே ஆற்று மணல் கடத்தியதாக லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த தேசூா் போலீஸாா் மடம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனச் சோதனை மேற்கொண்டனா். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், லாரியில் விண்ணமங்கலம் ஆற்றுப் பகுதியிலிருந்து மணல் கடத்திச் செல்வது தெரிய வந்தது.

இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநா் மடம் கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் (46) என்பவரை கைது செய்தனா். இதுகுறித்து தேசூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments