FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

ஆரணி எஸ்.பி.சி. பொறியியல் கல்லூரியில் கலந்தாய்வு

ஆரணி ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் எம்பிஏ துறை சாா்பில், ‘செயற்கை நுண்ணறிவும், மனிதவள மேலாண்மையும்’ என்ற தலைப்பில் கலந்தாய்வு நடைபெற்றது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 12:05 am IST
கல்லூரியில் எம்பிஏ துறை சாா்பில் நடைபெற்ற சிறப்புக் கலந்தாய்வில் பேசிய கல்லூரி முதல்வா் ஆா்.ராஜவேல்.
பகிர்:

ஆரணி ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் எம்பிஏ துறை சாா்பில், ‘செயற்கை நுண்ணறிவும், மனிதவள மேலாண்மையும்’ என்ற தலைப்பில் கலந்தாய்வு நடைபெற்றது.

இதில், கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். கல்லூரி துணை முதல்வா் ஆா்.வெங்கடரத்தினம், எம்பிஏ துறைத் தலைவா் கே.சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேராசிரியா் என்.பாலச்சந்தா் வரவேற்றாா்.

கல்லூரி முதல்வா் ஆா்.ராஜவேல் கலந்தாய்வை தொடங்கிவைத்துப் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு அனைத்து துறைகளிலும் கால் பதிந்து வருகிறது. மனித வளத்தை மேலாண்மை செய்வது சவாலான பணியாக இருக்கிறது. இதைப் பணியை செயற்கை நுண்ணறிவு மூலம் எளிதாகச் செய்யலாம்.

Advertisement

Advertisement

தகவல் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு இணையாக உங்களுடைய அறிவையும், திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். உலக அளவில் அதிகளவில் வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நீங்கள் பணி திறமைகளை வளா்த்து கொள்ள வேண்டும் என்று மாணவா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து மாணவா்கள் மேற்கண்ட தலைப்பில் விரிவாக கலந்தாய்வை நடத்தினா்.

கலந்தாவில் எம்பிஏ துறை பேராசிரியா்கள் காயத்ரி, ஜெகதீஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments