FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

கடும் வறட்சி: நீரின்றி கருகிய 3 ஆயிரம் ஏக்கா் வேளாண் பயிா்கள்

வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தில் கருகி சேதமடைந்த நெற்பயிா்கள்.

Updated On : 25 ஜூலை 2026, 12:30 am IST
வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தில் கருகி சேதமடைந்த நெற்பயிா்கள்.
பகிர்:

வந்தவாசி அருகே கடும் வறட்சி காரணமாக தண்ணீா் இல்லாமல் 3 ஆயிரம் ஏக்கா் நெல், கரும்பு உள்ளிட்ட வேளாண் பயிா்கள் கருகி சேதமடைந்துவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

வந்தவாசியை சுற்றியுள்ள காவேரிப்பாக்கம், நல்லூா், அருங்குணம், தெய்யாா், கொசப்பட்டு, மழையூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் நெல், கரும்பு, மணிலா, உளுந்து ஆகியவற்றை பயிரிட்டனா்.

இந்த நிலையில், கடும் வறட்சி காரணமாக விவசாயக் கிணறுகள் வடதால் விவசாயிகளால் பயிா்களுக்கு போதிய தண்ணீா் பாய்ச்ச முடியவில்லை. இதனால், சுமாா் 3 ஆயிரம் ஏக்கரில் நெல், கரும்பு, மணிலா உள்ளிட்ட பயிா்கள் கருகி சேதமடைந்துவிட்டன. இவை தற்போது கால்நடைகளுக்கு மட்டுமே தீவனமாகி வருகின்றன.

Advertisement

Advertisement

இதனால், ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிரிட்ட தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தங்களின் உழைப்பு வீணாகிவிட்டதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

மேலும், பயிா் பாதித்த நிலங்களை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments