கல்லூரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வு
வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் எம்.ரமணன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி முன்னிலை வகித்தாா்.
வந்தவாசி வட்டாட்சியா் பா.ஜெயவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினாா்.
Advertisement
Advertisement
அப்போது, மக்கள்தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவம், ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பு, சரியான தகவல்களை வழங்குவதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து அவா் மாணவிகளுக்கு விளக்கிக் கூறினாா்.
மேலும், கணக்கெடுப்பின் போது கேட்கப்படும் கேள்விகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை அவா் மாணவிகளுக்கு வழங்கினாா். வருவாய் ஆய்வாளா் வெங்கடேசன் நன்றி தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.