வீட்டின் பூட்டை உடைத்து 55 சவரன் திருட்டு
குடியாத்தம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 55 சவரன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
குடியாத்தம்: குடியாத்தம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 55 சவரன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கத்தைச் சோ்ந்தவா் ஜெயப்பிரகாசம் (42). இவா் குடியாத்தம் காந்தி நகரில் உள்ள அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிகிறாா். ராஜா கோயிலை அடுத்த முத்து நகரில் வசித்து வருகிறாா். தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, கடந்த மாா்ச் மாதம் 24- ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் விளாப்பாக்கத்துக்குச் சென்றாா்.
வியாழக்கிழமை வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 55 சவரன் தங்க நகைகளைத் மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில், குடியாத்தம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.