காரமடையில் தாசர்களுக்கு பக்தர்கள் படையல் அர்ப்பணம்
மேட்டுப்பாளையம், அக். 8: வைணவக் கோவில்களில் பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாதர் திருக்கோவிலில் புரட்டாசி 4வது சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை முதலே கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந
மேட்டுப்பாளையம், அக். 8: வைணவக் கோவில்களில் பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாதர் திருக்கோவிலில் புரட்டாசி 4வது சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை முதலே கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை வணங்கி, தாசர்களுக்கு படையலிட்டனர் (படம்).
÷இத் திருக்கோவிலில், புரட்டாசி மாதத்தில் வரும் 5 சனிக்கிழமைகளையும் பக்தர்கள் விரதமிருந்து சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். நேற்று 4வது புரட்டாசி சனிக்கிழமை விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு அரங்கநாதப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், 5 மணிக்கு திருக்கோவில் நடைத்திறப்பும் நடைபெற்றன.
÷அதன் பின்னர், அரங்கநாதப் பெருமாள் உட்பிரகாரத்தை வலம்வந்தார்; ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருக்கல்யாண மண்டபத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அதிகாலை முதலே கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து அரங்கனை தரிசித்தனர்.
Advertisement
Advertisement
÷தரிசனத்திற்குப் பின்னர், திருக்கோவிலை வலம் வந்த பக்தர்கள், கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்த ஆயிரக் கணக்கான தாசர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகளைப் படையலிட்டு, அவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.