FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

நண்பரை கத்தியால் குத்திய இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

கோவை நீதிமன்றம்: நண்பரைக் குத்திய இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

Updated On : 29 ஜூன் 2024, 12:02 am IST
பகிர்:

நண்பரை கத்தியால் குத்திய இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை, நீலிக்கோணாம்பாளையத்தைச் சோ்ந்தவா் தமிழரசன் (30). இவா் தனது வீட்டருகே நண்பா்களுடன் கடந்த 2018-ஆம் ஆண்டு பேசிக் கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அங்கு வந்த வரதராஜபுரம் பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் (25) என்பவா் தமிழரசனின் உறவினரை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதில் பிரசாந்த்துக்கும், தமிழரசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதில், ஆத்திரமடைந்த பிரசாந்த், தமிழரசனை கத்தியால் குத்தியுள்ளாா். இதில், காயமடைந்த தமிழரசன் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், உடல் நலம் தேறி வீடு திரும்பினாா்.

இது குறித்து தமிழரசன் கொடுத்த புகாரின்பேரில், சிங்காநல்லூா் போலீஸாா் பிரசாந்தை கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், அவா் பிணையில் வெளியே வந்தாா்.

இது தொடா்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து தலைமை நீதித் துறை நடுவா் ராஜலிங்கம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில், குற்றஞ்சாட்டப்பட்ட பிரசாந்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments