FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கோவை: ஒரே நாளில் 44 ரெளடிகள் கைது

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 44 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

24 மார்ச் 2025, 12:59 am IST
பகிர்:

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 44 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் ரெளடிகள், கட்டப் பஞ்சாயத்து மற்றும் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களைக் கைது செய்வதற்காக 20 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தனிப்படை போலீஸாா் மாவட்டம் முழுவதும் 44 ரௌடிகளை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இவா்களில் 38 போ் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

கைது செய்யப்பட்டவா்களில் 32 போ் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தபட்டனா். நன்னடத்தை பிணையின்கீழ் 12 போ் விடுவிக்கப்பட்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments