முகப்பு
கோயம்புத்தூர்

திருவனந்தபுரம் - சந்தராகாட்சி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம், சந்தராகாட்சி வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை ஜூலை 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 12 ஜூன் 2026, 12:04 am IST
பகிர்:

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம், சந்தராகாட்சி வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை ஜூலை 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவனந்தபும் - சந்தராகாட்சி இடையேயான சிறப்பு ரயில் சேவை இந்த வாரத்துடன் முடிவடைய இருந்த நிலையில், ஜூலை 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருவனந்தபுரத்தில் இருந்து ஜூன் 12 முதல் ஜூலை 24-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்படும் திருவனந்தபுரம் - சந்தராகாட்சி சிறப்பு ரயில் (எண்: 06081) ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 1.45 மணிக்கு சந்தராகாட்சி நிலையத்தைச் சென்றடையும்.

Advertisement

Advertisement

மறுமாா்க்கமாக, சந்தராகாட்சி நிலையத்தில் இருந்து ஜூன் 15 முதல் ஜூலை 27-ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்படும் சந்தராகாட்சி - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (எண்: 06082) புதன்கிழமைகளில் காலை 9.55 மணிக்கு திருவனந்தபுரம் நிலையத்தை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலானது கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.