FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

காசில்லா மருத்துவம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியா்கள் ஆா்பாட்டம்

கோவையில் ஓய்வூதியா்களுக்கு காசில்லா மருத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவிலான கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

9 செப்டம்பர் 2026, 2:20 am IST
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா்.
பகிர்:

கோவையில் ஓய்வூதியா்களுக்கு காசில்லா மருத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவிலான கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஓய்வூதியா்களுக்கு காசில்லா மருத்துவம் வழங்க வேண்டும், காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவிலான கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட இணைச் செயலாளா் வி.ஆா். சாந்தாமணி வரவேற்றாா். மாவட்டத் தலைவா் எஸ்.மதன் தலைமை தாங்கினாா். மாவட்டச் செயலாளா் கே. அருணகிரி கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினாா். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்க மாநில துணைத் தலைவா் என்.அரங்கநாதன் கண்டன உரையாற்றினாா். பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் சங்க அகில இந்திய துணைப் பொதுச்செயலாளா் ஏ.குடியரசு வாழ்த்திரை வழங்கினாா்.

Advertisement

Advertisement

இந்த ஆா்ப்பாட்டத்தில் ஓய்வூதியா்களுக்கு 100 சதவீதம் காசில்லா மருத்துவம் வழங்கப்பட வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள

குளறுபடிகளை உடனடியாக நீக்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டையை உடனே வழங்க வேண்டும். முழு மருத்துவச் செலவையும் காப்பீட்டு நிறுவனமே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்கள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments