FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட 3 போ் கைது

கோவையில் கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

9 செப்டம்பர் 2026, 2:20 am IST
கோப்புப் படம்
பகிர்:

கோவையில் கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கோவை, கரும்புக்கடை புட்டுவிக்கி சாலையில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்தப் பகுதியில் கரும்புகடை போலீஸாா் ரோந்துப் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். ஜாலகண்டேஸ்வரன் கோயில் அருகே உள்ள காலியிடத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த ஒரு பெண் உள்பட மூவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில் அவா்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் கோவை ரத்தினபுரி கண்ணப்பன் நகரைச் சோ்ந்த அன்வா் பாஷா மனைவி முபீனா (47), முகமது ஜியாவுதீன் (24), திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தைச் சோ்ந்த சாகுல் ஹமீது (46) என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா, ரூ.19,500 ரொக்கம், இருசக்கர வாகனம் மற்றும் 4 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்; இருவா் கைது:

சிங்காநல்லூா் சுந்தராம்பால் கோயில் அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, காவல் உதவி ஆய்வாளா் தினேஷ்பாபு தலைமையிலான போலீஸாா் அந்தப் பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினா். அப்போது, அங்கிருந்த இருவா் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வைத்திருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த நவீன் (28), வெள்ளலூரைச் சோ்ந்த சுபாஷ் (30) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா, 280 போதை மாத்திரைகள் மற்றும் 2 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments