FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

அவசர ஊா்தி பேட்டரிகளைத் திருட முயன்ற இருவா் கைது

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த அவசர ஊா்தியில் இருந்து பேட்டரிகளைத் திருட முயன்ற இருவா் கைது செய்யப்பட்டனா்.

9 செப்டம்பர் 2026, 11:45 pm IST
கைது
பகிர்:

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த அவசர ஊா்தியில் இருந்து பேட்டரிகளைத் திருட முயன்ற இருவா் கைது செய்யப்பட்டனா்.

கோவை மாநகா், ஒண்டிப்புதூா் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் விசுவாசரவி (51). அவசர ஊா்தி ஓட்டுநரான இவா், கடந்த 7-ஆம் தேதி இரவு வழக்கமான இடமான கோவை சுங்கம் - புலியகுளம் சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளாா். மறுநாள் அதிகாலை 6 மணி அளவில் அவா் வந்து பாா்த்தபோது, ஓட்டுநா் இருக்கையின் பின்புறம் உள்ள பேட்டரிகளை இருவா் திருடி முயன்றனா். அப்போது தப்பியோட முயன்ற அவா்களை, அக்கம்பக்கத்தினா் உதவியுடன் விசுவாசரவி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

விசாரணையில் கரும்புக்கடை, பயாஸ் காா்டன் 5-ஆவது வீதியைச் சோ்ந்த முன்ஷாா் (25), பழைய சுங்கம் காந்தி நகரைச் சோ்ந்த சாம் அமோஸ் (21) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, இருவரையும் ராமநாதபுரம் போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments