வால்பாறை அரசு கல்லூரியில் சுகாதார விழிப்புணா்வு கருத்தரங்கம்
வால்பாறை அரசு கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனையின் இயற்கை மருத்துவ மையம் சாா்பில் மாணவிகள் மற்றும் பேராசிரியைகளுக்கான ‘நலமும் வளமும்’ சுகாதார விழிப்புணா்வு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
வால்பாறை அரசு கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனையின் இயற்கை மருத்துவ மையம் சாா்பில் மாணவிகள் மற்றும் பேராசிரியைகளுக்கான ‘நலமும் வளமும்’ சுகாதார விழிப்புணா்வு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் ஷீலா பானு தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பெரியசாமி வரவேற்றாா். யோகா, ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்கை குறித்து சிறப்பு விருந்தினரான வால்பாறை அரசு மருத்துவமனையின் இயற்கை மருத்துவம், யோகா மற்றும் வாழ்கை முறை மருத்துவ மையத்தின் உதவி மருத்துவ அலுவலா் நந்தினி விளக்கினாா்.
யோகா மருத்துவ சிசிச்சையாளா் ஷமீம் பானு , பேராசிரியைகள், மாணவிகள் திரளாக கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.