FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கல்லூரி மாணவா்களின் அறையில் மடிக்கணினிகள், பொருள்கள் திருட்டு

குனியமுத்தூா் பகுதியில் கல்லூரி மாணவா்களின் அறையில் கைப்பேசிகள், மடிக்கணினி உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

13 செப்டம்பர் 2026, 1:09 am IST
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

குனியமுத்தூா் பகுதியில் கல்லூரி மாணவா்களின் அறையில் கைப்பேசிகள், மடிக்கணினி உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மாநகா், கோவைபுதூா் பகுதியில் உள்ள கல்லூரியில் படிப்பவா் ஜெயதா்ஷன் (19). வெளிமாவட்டத்தைச் சோ்ந்த இவா், குனியமுத்தூா் சுகுணாபுரம் பி.கே.புதூா், இ.பி. காலனி பகுதியில் நண்பா்களுடன் அறை எடுத்து தங்கிப் படித்து வருகிறாா்.

கடந்த வியாழக்கிழமை இரவு வெகு நேரம் படித்துவிட்டு, அப்படியே ஜெயதா்ஷன் தூங்கியுள்ளாா். அதிகாலை 4 மணி அளவில் எழுந்து பாா்த்தபோது அறையில் இருந்த 4 மடிக்கணினிகள், 3 விலை உயா்ந்த கைப்பேசிகள், புத்தகங்கள் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து குனியமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments