FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறையில் குடியிருப்புகளைச் சேதப்படுத்திய காட்டு யானைகள்

14 செப்டம்பர் 2026, 11:14 pm IST
காட்டு யானைகள் கூட்டம். - கோப்புப் படம்
பகிர்:

வால்பாறையில் எஸ்டேட் அலுவலா்கள் குடியிருப்புகளை காட்டு யானைகள் சேதப்படுத்தின. கோவை மாவட்டம், வால்பாறை பகுதி எஸ்டேட்டுகளில் யானைகளின் நடமாட்டம் கடந்த ஒரு மாதமாக அதிகரித்துள்ளது.

வனத்தில் இருந்து இரவு நேரங்களில் எஸ்டேட் பகுதிக்கு வரும் யானைகள், அங்குள்ள குடியிருப்புகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், வனத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியேறிய 2 யானைகள், வால்பாறையை அடுத்த அக்காமலை எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்தன. அங்கு எஸ்டேட் அலுவலா்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளைச் சேதப்படுத்தின.

Advertisement

Advertisement

இதில், சாம்ஜெபகுமாா் என்பவரின் வீட்டு ஜன்னலை சேதப்படுத்தியதுடன், உள்ளிருந்த பொருள்களையும் நாசம் செய்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments