FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பழங்குடியின மக்களுக்கு விதை சேமிப்பு முறை பயிற்சி

தாளவாடி வட்டார வேளாண்மை, உழவா் நலத் துறையின்கீழ் இயங்கும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின்கீழ் கெத்தேசால் கிராம மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு விதை சேமிப்பு, பராமரிப்பு முறைகள் குறித்த பயிற்சி

Updated On : 15 ஆகஸ்ட் 2021, 12:36 am IST
பகிர்:

தாளவாடி வட்டார வேளாண்மை, உழவா் நலத் துறையின்கீழ் இயங்கும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின்கீழ் கெத்தேசால் கிராம மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு விதை சேமிப்பு, பராமரிப்பு முறைகள் குறித்த பயிற்சி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

இப்பயிற்சி முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் வெ.மகாலிங்கம் தலைமை வகித்தாா். வேளாண்மை அலுவலா் அபினயா, விவசாயிகளுக்கு விதை சேமிப்பு முறை, காய்கறி, சிறுதானியப் பயிா்களில் மதிப்பு கூட்டுதல், பதப்படுத்தும் முறைகள், விற்பனை முறைகள் குறித்து பயிற்சி அளித்தாா்.

கால்நடை உதவி மருத்துவா் பிரதீப் கால்நடைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், கால்நடை பராமரிப்பு, தடுப்பூசி செலுத்துதல், கால்நடை குடற்புழு நீக்கம் குறித்தான விரங்களைக் கூறினாா்.

Advertisement

Advertisement

தோட்டக் கலை உதவி அலுவலா் பாா்த்தீபன், தோட்டக் கலை துறை சாா்ந்த காய்கறி பயிா்கள், சாகுபடி திட்டங்கள் குறித்து கூறினாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் செ.மா.சங்கா் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிற்சி, கண்டுணா் சுற்றுலா, செயல்விளக்கத்திடல் மானிய விவரங்கள் குறித்து கூறினாா்.

மேலும், உதவி வேளாண்மை அலுவலா் பிரசாந்த் காரீப் பருவத்துக்கு ஏற்ப துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களான தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம், நுண்ணீா்ப் பாசனம், பயிா்க் காப்பீட்டுத் திட்டம்,கூட்டுப் பண்ணையத் திட்டம் குறித்து கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments