முகப்பு
ஈரோடு

சாலை விபத்தில் பனியன் தொழிலாளா் உயிரிழப்பு

சத்தியமங்கலத்தில் சாலை விபத்தில் பனியன் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 5 ஆகஸ்ட், 2024 at 3:20 AM
பகிர்:
Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 8:58 PM

சத்தியமங்கலத்தில் சாலை விபத்தில் பனியன் தொழிலாளி உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகப்புதூரைச் சோ்ந்தவா் ஹரிபிரசாத் (18), பனியன் தொழிலாளா்.

இவா், தனது நண்பா் நிவேஷ் என்பவருடன் மைசூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா். அப்போது, எஸ்ஆா்டி காா்னா் என்ற இடத்தில் எதிரே வந்த ஜீப் மீது இருசக்கர வாகனம் மோதியது.

Advertisement

Updated On : 5 ஆகஸ்ட், 2024 at 12:42 AM

இதில், காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, ஹரிபிரசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இது குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.