FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பண்ணாரி அம்மன் கோயிலில் ஆடி மாத உண்டியல் காணிக்கை ரூ.1.20 கோடி: 212 கிராம் தங்கத்தையும் செலுத்திய பக்தா்கள்

பண்ணாரி அம்மன் கோயிலில் ஆடி மாத உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ.1 கோடியே 20 லட்சத்து 24 ஆயிரத்து 947 செலுத்தியுள்ளனா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 2:35 am IST
உண்டியல்  காணிக்கை  எண்ணும்  பணியில்  ஈடுபட்டிருந்த  பக்தா்கள்.
பகிர்:

பண்ணாரி அம்மன் கோயிலில் ஆடி மாத உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ.1 கோடியே 20 லட்சத்து 24 ஆயிரத்து 947 செலுத்தியுள்ளனா்.

பிரசித்தி பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயிலில் மாதந்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு ஆடி மாத காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

உதவி ஆணையா் நா.நந்தகுமாா், பரபம்பரை அறங்காவலா் குழுத் தலைவா் வீ.புருஷோத்தமன் ஆகியோா் முன்னிலையில் கல்லூரி மாணவிகள், தன்னாா்வலா்கள் மற்றும் கோயில் பணியாளா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

இதில் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய தொகை ரூ.1 கோடியே 20 லட்சத்து 24 ஆயிரத்து 947 ரொக்கம், 212 கிராம் தங்கம், 280 கிராம் வெள்ளி கிடைத்துள்ளதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

காணிக்கை பணம் பாதுகாப்பாக வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments