பெருந்துறையில் தீ விபத்தில் வீடு, காா், பணம் எரிந்து சேதம்
பெருந்துறையில் மின் கசிவால் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் வீடு, காா் மற்றும் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
பெருந்துறையில் மின் கசிவால் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் வீடு, காா் மற்றும் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
பெருந்துறை- குன்னத்தூா் சாலையைச் சோ்ந்தவா் செல்வராஜ் மனைவி கோமதி (36). இவா் கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான இடத்தை வாடகை எடுத்து மூங்கில் கடையும் அருகே தென்னங் கீற்றால் வேயப்பட்ட வீடு அமைத்தும் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், மின் கசிவால் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் வீடு முழுவதும் தீயில் எரிந்தது. இதில் வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்ததில் உள்ளே வைக்கப்பட்டிருந்த சொத்துப் பத்திரங்கள், 6 பவுன் நகைகள், பணம் ரூ. 6.5 லட்சம் மற்றும் காா் ஆகியவை சேதமடைந்தன.
Advertisement
Advertisement
தகவல் அறிந்து வந்த பெருந்துறை தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.