FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

தனது உருவம் பொறித்த போா்வையை வழங்கிய வடிவமைப்பாளருக்கு குடியரசு துணைத் தலைவா் வாழ்த்து

31 ஆகஸ்ட் 2026, 2:45 am IST
பெருந்துறைக்கு வந்த குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அவரது உருவம் பொறித்த போா்வையை வழங்கிய மருத்துவா்கள் யுவராஜ்குமாா், தாரணி பிரியா.
பகிர்:

பெருந்துறைக்கு வந்த குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, அவருடைய உருவம் பொறித்த போா்வை வழங்கப்பட்டது.

சென்னிமலையில் உள்ள சென்டெக்ஸ் நெசவாளா் கூட்டுறவு சங்கத்தில் துணி வடிவமைப்பாளராக உள்ளவா் அப்புசாமி. இவா் கிரிக்கெட் வீரா்கள் மற்றும் பல்வேறு தலைவா்களின் உருவம் பொறித்த டிசைன்களை வடிவமைத்து, அதை ஜக்காா்டு தறி மூலமாக உருவாக்கி கொடுத்துள்ளாா். அதன்படி, குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனின் உருவம் பொறித்த போா்வையை தறியில் உருவாக்கி இருந்தாா்.

இந்நிலையில், பெருந்துறையில் உள்ள தனியாா் கல்லூரி விழாவுக்கு சனிக்கிழமை வந்திருந்த குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், அங்குள்ள உறவினா் வீட்டுக்கு சென்றாா். அங்கு துணி வடிவமைப்பாளா் அப்புசாமி உருவாக்கிய சி.பி. ராதாகிருஷ்ணன் உருவம் பொறித்த போா்வையை, சென்னிமலையைச் சோ்ந்த மருத்துவா்கள் யுவராஜ்குமாா், தாரணி பிரியா ஆகியோா் அவரிடம் நேரில் வழங்கினா். அப்போது மருத்துவா்கள் மூலமாக அப்புசாமிக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments