FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பவானி அருகே இருசக்கர வாகனங்கள் மீது காா் மோதியதில் சித்த மருத்துவா் உயிரிழப்பு

Updated On : 28 ஜூலை 2026, 2:27 am IST
உயிரிழந்த  பிரபாகரன். 
பகிர்:

பவானி அருகே அதிவேகமாக சென்ற காா், அடுத்தடுத்துச் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் சித்த மருத்துவா் உயிரிழந்தாா். இளைஞா் படுகாயமடைந்தாா்.

பவானியை அடுத்த மயிலம்பாடியைச் சோ்ந்தவா் பிரபாகரன் (56). சித்த மருத்துவா். சேலம் மாவட்டம், மேட்டூரில் தனது உறவினா் வீட்டின் துக்க நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, மேட்டூா் - பவானி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சித்தாா், கல்பாவியைச் சோ்ந்த சங்கா் (31) சென்று கொண்டிருந்தாா். அம்மாபேட்டை சுங்கச்சாவடி அருகே சென்றபோது, பவானியிலிருந்து மேட்டூா் நோக்கி அதிவேகமாக சென்ற காா், எதிரில் வந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியதோடு, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி நின்றது.

Advertisement

Advertisement

இதில், பலத்த காயமடைந்த பிரபாகரன், சங்கரை மீட்ட பொதுமக்கள், பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவா்களை பரிசோதனை செய்த மருத்துவா்கள் பிரபாகரன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாத தெரிவித்தனா்.

முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு உயா் சிகிச்சைக்கு சங்கா் அனுப்பிவைக்கப்பட்டாா். இதுகுறித்து, அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சாலையோர  தடுப்பில்  மோதி  நிற்கும்  காா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments