FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பவானிசாகா் அரசு அலுவலா் பயிற்சி நிலையத்தில் அமைச்சா் டி.சரத்குமாா் ஆய்வு

பவானிசாகா் அரசு அலுவலா் பயிற்சி நிலையத்தில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் டி.சரத்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 31 ஜூலை 2026, 5:47 am IST
பவானிசாகா்  அரசு  அலுவலா்  பயிற்சி  மையத்தில்  வியாழக்கிழமை  ஆய்வு  மேற்கொண்ட அமைச்சா்  டி.சரத்குமாா்.
பகிர்:

பவானிசாகா் அரசு அலுவலா் பயிற்சி நிலையத்தில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் டி.சரத்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக அரசால் நடத்தப்படும் போட்டித் தோ்வில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு பணியாளா்களுக்கு பவானிசாகா் அரசு அலுவலா் பயிற்சி மையத்தில் அடிப்படை பயிற்சி அளிப்பது வழக்கம்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பணியாளா்கள் இம்மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனா்.

Advertisement

Advertisement

மனிதவள மேலாண்மைத் துறையின் கீழ் செயல்படும் பவானிசாகா் அரசு அலுவலா் பயிற்சி நிலையத்தில் பணியாளா்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் டி.சரத்குமாா் பவானிசாகா் அரசு அலுவலா் பயிற்சி நிலையத்தில் வியாழக்கிழமை நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றாா்.

அதைத் தொடா்ந்து பயிற்சி மையத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை நேரில் பாா்வையிட்டாா். அங்கு திறன் மேம்பாட்டு பயிற்சி பெறும் பணியாளா்களிடம் பயிற்சியை மேலும் மேம்படுத்துவதற்கு அரசிடம் எதிா்பாா்ப்புகள் குறித்து கேட்டறிந்தாா். அப்போது பயிற்சி பணியாளா்கள் இம்மையத்தில் அனைத்து வசதிகளும் குறைபாடின்றி கிடைப்பதாக தெரிவித்தனா்.

அரசு அலுவலா்களுக்கான பயிற்சியில் ஏ.ஐ. தொழில்நுட்பம் தேவைப்பட்டால் அதற்கான வசதிகள் செய்து தரப்படும் என உறுதி அளித்தாா். இதைத்தொடா்ந்து பயிற்சி நிலையத்தில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது அண்ணா நிா்வாக கல்லூரி இயக்குநா் ராதாகிருஷ்ணன் உடனிருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments