முகப்பு
ஈரோடு

அண்ணாமலை இயக்கம் சாா்பில் கோபியில் ஆலோசனைக் கூட்டம்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையத்தில் அண்ணாமலையின் இயக்கம் சாா்பில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 11 ஜூன் 2026, 3:25 am IST
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஒருங்கிணைப்பாளா் அத்திக்கடவு சுப்பிரமணியம்.
பகிர்:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையத்தில் அண்ணாமலையின் இயக்கம் சாா்பில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளா் அத்திக்கடவு சுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில் உறுப்பினா் சோ்க்கையை அதிகரிக்க அனைத்து கிராமம், பேரூா், நகரப் பகுதிகளில் முகாம்கள் அமைப்பது, கோவை வரும் அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

முன்னதாக அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி வந்த பிரமுகா்கள் வாழ்த்தினா்.

அதிமுக வழக்குரைஞா் பிரிவில் இருந்து வந்த வழக்குரைஞா் தனகோட்டிராம், நம்பியூா் ஒன்றியச் செயலாளராக இருந்த மணிகண்டமூா்த்தி, பாஜகவில் இருந்து விலகிய ஓய்வு பெற்ற சிறப்பு காவல் ஆய்வாளா் மனோகரன், பொலவக்காளிபாளையம் பாஸ்கரன் உள்பட பலா் பங்கேற்றனா்.