FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்

Updated On : 1 ஜூன் 2026, 2:41 am IST
கொடிவேரி அணையில் குளித்து மகிழ்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்
பகிர்:

கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை திரண்டனா்.

கடந்த ஏப்ரல் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும், பள்ளிக் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதாலும் ஒரு மாதத்துக்கு மேலாக கொடிவேரி அணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனா்.

அதன்படி விடுமுறை தினம் என்பதால் கொடிவேரி அணைக்கு ஞாயிற்றுகிழமை காலை முதல் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் குழந்தைகளுடன் குடும்பமாக வந்தனா்.

Advertisement

Advertisement

குறைந்த அளவு தண்ணீா் வெளியேறிய நிலையிலும் குழந்தைகளுடன் உற்சாகமாக குளித்தும், விளையாடியும் மகிழ்ந்தனா்.

கொடிவேரி அணையில் ரூ.5 நுழைவுக் கட்டணத்தில் அருவியில் நீண்ட நேரம் குளித்தும் பரிசல் சவாரிக்கு தனி கட்டணத்தில் பரிசல் சவாரி செய்து சுற்றுலா பயணிகள் பள்ளி குழந்தைகளுடன் கோடை விடுமுறையுடன் ஞாயிறு விடுமுறை தினத்தை மகிழ்ச்சியாக கழித்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments