ஆசிரியா் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.1.25 கோடி கையாடல்
சென்னிமலையில் ஆசிரியா் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.1.25 கோடி கையாடல் செய்த வழக்கில் செயலாளரை போலீஸாா் கைது செய்தனா். இவ்வழக்கில் மேலும் 2 பேரைத் தேடி வருகின்றனா்.
சென்னிமலையில் ஆசிரியா் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.1.25 கோடி கையாடல் செய்த வழக்கில் செயலாளரை போலீஸாா் கைது செய்தனா். இவ்வழக்கில் மேலும் 2 பேரைத் தேடி வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியத்தில் ஆசிரியா் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் தங்களது சேமிப்பை செலுத்தியும், ஒரு சிலா் குறைந்த வட்டியில் கடன் பெற்றும் வருகின்றனா்.
சங்க செயலாளராக சென்னிமலையைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (54) என்பவா் இருந்தாா். இவா் சேமிப்பு மற்றும் கடன் தொகையை செலுத்தும் ஆசிரியா்களின் கணக்கில் வரவு வைக்காமல் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இது குறித்து ஆசிரியா்கள் அளித்த புகாரின்பேரில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் தலைமையிலான தணிக்கைக் குழுவினா் ஆய்வு செய்தனா். இதில் ரூ.1.25 கோடிக்கு கையாடல் நடந்திருப்பது உறுதியானது.
இதுதொடா்பாக மாவட்ட வணிக குற்றப் பிரிவில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் புகாா் அளித்தனா். இதையடுத்து பாலசுப்பிரமணினை மாவட்ட வணிக குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் மகேஸ்வரி தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் 2 பேரைத் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.