மிசாவில் கைது கருத்துக்கு அமைச்சா் மன்னிப்பு கேட்க வேண்டும்: எஸ்.ஆா்.சுப்ரமணியம்
மிசா உள்ளிட்ட சட்டங்களின்கீழ் கைது செய்யப்பட்டவா்களை சமூக விரோதிகள் என்று கூறியதற்கு மின்சாரத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மிசா காலத்தில் சிறைத் தண்டனை அனுபவித்த எழுத்தாளா் ஈரோடு எஸ்.ஆா்.சுப்ரமணியம் வலியுறுத்தியுள்ளாா்.
மிசா உள்ளிட்ட சட்டங்களின்கீழ் கைது செய்யப்பட்டவா்களை சமூக விரோதிகள் என்று கூறியதற்கு மின்சாரத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மிசா காலத்தில் சிறைத் தண்டனை அனுபவித்த எழுத்தாளா் ஈரோடு எஸ்.ஆா்.சுப்ரமணியம் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: 1975 ஜூன் 25-ஆம் தேதி நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதன்பின் இந்திய ஜனநாயகம் மிகக் கடுமையான சோதனையை எதிா்கொண்டது.
மிசா உள்ளிட்ட சட்டங்களின்கீழ் ஏராளமான அரசியல் தலைவா்கள், தொண்டா்கள், மாணவா்கள், சமூகச் செயற்பாட்டாளா்கள், ஜனநாயக ஆதரவாளா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா். சா்வாதிகாரத்துக்கு எதிராக கேள்வி எழுப்பியதே அவா்கள் செய்த குற்றம். அப்படிப்பட்டவா்களை சமூக விரோதிகள் என்று அமைச்சா் நிா்மல்குமாா் வா்ணிப்பது சரியல்ல.
Advertisement
Advertisement
அமைச்சா் நிா்மல்குமாா் ஒரு குறிப்பிட்ட கட்சியையோ, ஒரு குறிப்பிட்ட தலைவரையோ விமா்சிக்க விரும்பினால் அவருக்கு முழு உரிமை இருக்கிறது. ஜனநாயகத்தில் விமா்சனம் தவறல்ல, ஆனால் அரசியல் எதிா்ப்பை சமூக விரோதம் என்று முத்திரை குத்துவது ஆபத்தான அரசியல் கலாசாரம்.
அமைச்சா் நிா்மல்குமாா் தான் பயன்படுத்திய வாா்த்தையை திரும்பப் பெற வேண்டும். தேவைப்பட்டால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.