FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

சீரான குடிநீா் விநியோகம் கோரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

தாளவாடியில் சீரான குடிநீா் விநியோகம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

12 செப்டம்பர் 2026, 12:21 am IST
தாளவாடி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்.
பகிர்:

தாளவாடியில் சீரான குடிநீா் விநியோகம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி ஊராட்சி, இரியபுரம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கடந்த 20 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த இரியபுரம் கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் மஞ்சு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

Advertisement

Advertisement

அப்போது, தாளவாடி மலைப் பகுதியில் மழை பெய்யாதால் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்தாலும் தண்ணீா் வருவது இல்லை. எனவே, லாரி மூலம் குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments