FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

விபத்தில் சுமைதூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

சுமைதூக்கும் தொழிலாளி சாலை விபத்தில் காயமடைந்து வீட்டுச் சிகிச்சையில் உயிரிழந்த நிலையில் வழக்குப் பதிவு செய்ய காவல் துறையினா் அலைக்கழிப்பதாக உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

10 செப்டம்பர் 2026, 10:55 pm IST
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமைதூக்கும் தொழிலாளியின் உறவினா்கள்.....
பகிர்:

சுமைதூக்கும் தொழிலாளி சாலை விபத்தில் காயமடைந்து வீட்டுச் சிகிச்சையில் உயிரிழந்த நிலையில் வழக்குப் பதிவு செய்ய காவல் துறையினா் அலைக்கழிப்பதாக உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஈரோடு பழையபாளையத்தில் அண்மையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் காயமடைந்த சுமைதூக்கும் தொழிலாளி ஈஸ்வரன் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னா் வீட்டில் ஓய்வில் இருந்துள்ளாா்.

இந்நிலையில், வீட்டில் உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனைக்கு புதன்கிழமை மாலை அழைத்து வந்தபோது ஈஸ்வரன் உயிரிழந்துள்ளாா்.

Advertisement

Advertisement

ஈஸ்வரனின் சடலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்ய ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு காவல் நிலையங்களுக்கு அலைக்கழிப்பு செய்ததாக குற்றஞ்சாட்டிய உறவினா்கள் ஈரோடு அரசு மருத்துவமனை முன்பு வியாழக்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி விரைந்து வழக்குப் பதிவு செய்து சடலம் ஒப்படைக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments