கோபி அருகே சாலை விபத்தில் மின்வாரிய மேற்பாா்வையாளா் உயிரிழப்பு
கோபி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மின்வாரிய மேற்பாா்வையாளா் உயிரிழந்தாா்.
கோபி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மின்வாரிய மேற்பாா்வையாளா் உயிரிழந்தாா்.
கோபி அருகே உள்ள கலிங்கியம் இந்திரா காந்தி வீதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (52). தாளவாடி மின்வாரிய அலுவலகத்தில் வருவாய் மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வந்தாா்.
இவா் தனது இருசக்கர வாகனத்தில் கலிங்கியம் - நல்லகவுண்டம்பாளையம் சாலையில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிா்த் திசையில் வந்த சரக்கு வாகனம் இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கிருஷ்ணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
அருகில் இருந்தவா்கள் கிருஷ்ணனை உடனடியாக மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்து உடலைக் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து குறித்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த காசிபாளையம் காந்தி நகரைச் சோ்ந்த சின்னத்தம்பியிடம் (53) கோபி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.