ஓவேலி மலைத் தொடரில் பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சி பூக்கள்
கூடலூரை அடுத்துள்ள ஓவேலி மலைத் தொடரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலூகா, ஓவேலி மலைத் தொடரில் 12 ஆண்டுளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலா்கள் பூத்து மலைத் தொடரை அலங்கரித்துள்ளன.
ஓவேலியின் கடைக்கோடி வனப் பகுதி, விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள மலைத் தொடரில் இந்தப் பூக்கள் பூத்துள்ளதால் அதைக் காண சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு செல்லக் கூடாது என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
Advertisement
Advertisement
மேலும், அப்பகுதியில் தொடா் கண்காணிப்புப் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.