FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

செலுக்காடி பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்

கூடலூரை அடுத்துள்ள செலுக்காடி பகுதியில் புதன்கிழமை காட்டு யானைகள் முகாமிட்டன.

Updated On : 23 ஜூலை 2026, 3:51 am IST
முகாமிட்டுள்ள காட்டு யானைகள்.
பகிர்:

கூடலூரை அடுத்துள்ள செலுக்காடி பகுதியில் புதன்கிழமை காட்டு யானைகள் முகாமிட்டன.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை, கனியம்வயல், தேவன் மற்றும் செலுக்காடி பகுதிகளில் தினமும் யானைகள் ஊருக்குள் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

யானைகளை வனத் துறையினா் விரட்டினாலும், மீண்டும் அதே பகுதிக்கு வந்து முகாமிடுவதை யானைகள் வழக்கமாக கொண்டுள்ளன. இந்நிலையில், செலுக்காடி பகுதியில் உள்ள சிறிய வனப் பகுதியில் யானைகள் புதன்கிழமை முகாமிட்டிருந்தன. இந்த யானைக் கூட்டம் இரவில் ஊருக்குள் நுழைய தயாா் நிலையில் சாலையோரம் வந்து நிற்பதாக அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments