FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

நூல் விலை கிலோவுக்கு ரூ.40 குறைவு: பின்னலாடை ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்பு

திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான அனைத்து ரக நூல்களும் கிலோவுக்கு ரூ.40 குறைந்துள்ளதால் ஏற்றுமதி, உள்நாட்டு ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Updated On : 1 ஜூலை 2022, 3:21 pm IST
கோப்புப்படம்
பகிர்:

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான அனைத்து ரக நூல்களும் கிலோவுக்கு ரூ.40 குறைந்துள்ளதால் ஏற்றுமதி, உள்நாட்டு ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

திருப்பூரில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச்சார்ந்த வேலை செய்யும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச்சார்ந்த தொழில்களில் நேரடியாக 6 லட்சம் பேர், மறைமுகமாக 4 லட்சம் பேர் என மொத்தம் 10 லட்சத்துக்கும் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.70 வரையில் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, உயர்த்தப்ட்ட நூல் விலையைக் குறைக்க வேண்டும் என்று நூற்பாலை சங்கங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுக்கு பின்னலாடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கடந்த ஜூன் மாத விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருந்த நிலையில், ஜூலை மாதத்தில் அனைத்து ரக நூல்களும் கிலோவுக்கு ரூ.40 குறைத்துள்ளதாக நூற்பாலை சங்கங்கள் அறிவித்துள்ளன. இதன் காரணமாக பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துக்கான ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 

திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில் சுமார் 85 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆகவே, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என்பது திருப்பூர் தொழில் அமைப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments