முகப்பு
திருப்பூர்

திருப்பூர்: நூல் விலை மீண்டும் கிலோவுக்கு ரூ.40 உயர்வு; பின்னலாடை உற்பத்தியாளர்கள் வேதனை

பின்னலாடை உற்பத்திக்கு தேவையான நூல் விலை கிலோவுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. பின்னலாடை உற்பத்தியாளர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

Updated On : 2 மே 2022, 12:21 pm IST
கோப்புப்படம்
பகிர்:

திருப்பூர்: பின்னலாடை உற்பத்திக்கு தேவையான நூல் விலை கிலோவுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. பின்னலாடை உற்பத்தியாளர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான நூல் விலையானது கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்தது. அதிலும் ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இது பின்னலாடை உற்பத்தியாளர்களை வெகுவாகப் பாதித்தது. 

இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி அனைத்து ரக நூல்களுக்கும் கிலோவுக்கு ரூ.50 வரையில் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பல்வேறு தொழில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் நூல் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

Advertisement

Advertisement

இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி நூல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்திருந்தது. இந்த நிலையில், 2022  ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் மூன்று மாதங்களில் கிலோவுக்கு ரூ.80 வரை உயர்ந்திருந்தது. அனைத்து ரக நூல்களுக்கும் கிலோவுக்கு ரூ.40  உயர்த்தி நூற்பாலை உரிமையாளர்கள் சார்பில் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் திருப்பூர் பின்னாலடை உற்பத்தி, ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள தொழில்துறையினருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், புதிய ஆர்டர்களை எடுப்பதற்கும், எடுத்த ஆர்டர்களுக்குத் தேவையான நூலைக் கொள்முதல் செய்யும்போது நஷ்டமடைய வாய்ப்பு உள்ளதாக தொழில்துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.