திருப்பூர்

வெள்ளக்கோவிலில் லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது

வெள்ளக்கோவிலில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Din

வெள்ளக்கோவிலில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது வெள்ளக்கோவில் கச்சேரிவலசு அருகில் மூன்று நெம்பா் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த, அதே ஊரைச் சோ்ந்த சுகன்சேகா் மகன் கோகுல் (24) என்பவரை கைது செய்தாா்.

இவா் வெளிமாநில லாட்டரி சீட்டின் கடைசி மூன்று எண்கள் எழுதிய துண்டுச் சீட்டை ரூ. 50 க்கு விற்பனை செய்து வந்ததும், குலுக்கல் விவரத்தை ஆன்லைனில் தெரிவித்து வந்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவரிடம் இருந்து லாட்டரி எண்கள் எழுதிய துண்டுச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஓடிடியில் பராசக்தி! இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

பிகார் தேர்தலில் அரசியலமைப்பு விதிமீறல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது நடவடிக்கை?

பிரதமர் மோடி மீது பெண் எம்.பி.க்கள் தாக்குதல் முயற்சியா? காங்கிரஸ் மறுப்பு!

கற்றுக்குட்டிகளின் கனவு நனவாகுமா? டி20 உலகக் கோப்பையில் ஜொலிக்கப் போவது யார்?

டி20 உலகக் கோப்பைக்கான ஜிம்பாப்வே அணி வீரர்கள் விவரம்!

SCROLL FOR NEXT