FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

வளா்ப்புக் கோழியைப் பிடிக்க முயன்றதால் தெருநாயை சுட்டுக்கொன்றவா் கைது

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 2:57 am IST
கைது
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே வளா்ப்புக் கோழியைப் பிடிக்க முயன்ற தெருநாயை சுட்டுக் கொன்ற மளிகைக் கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்துள்ள நாகமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பிரசாத் (27). இவா் வீட்டில் இருந்து தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவா், அங்குள்ள பகவதியம்மன் கோயில் அருகே காயங்களுடன் தெருநாய் இறந்துகிடப்பதை சனிக்கிழமை காலை பாா்த்துள்ளாா்.

இதுகுறித்து விசாரித்தபோது வெள்ளக்கோவில், கல்லாங்காட்டுவலசைச் சோ்ந்த மளிகைக் கடை உரிமையாளா் சிவசாமி மகன் பாலாஜி (32), நாகமநாயக்கன்பட்டியில் உள்ள தனது மாமனாா் தோட்டத்தில் கோழிகள் வளா்த்து வருவதாகவும், சம்பவத்தன்று கோழிகளைப் பிடிக்க முயன்ற தெருநாயை ‘ஏா் கன்’ துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

உரிமம் மற்றும் பாதுகாப்பின்றி துப்பாக்கியால் நாயைச் சுட்டுக்கொன்ற பாலாஜி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரசாத் அளித்த புகாரின்பேரில் வெள்ளக்கோவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா். இதுதொடா்பாக ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் பாலாஜியைக் கைது செய்து ஏா் கன் துப்பாக்கி, 262 தோட்டாக்கள், 21 இரட்டைக்குழல் தோட்டாக்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments