கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் பழைமையான மரங்கள் மறு நடவு
பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் திருப்பணியை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள பழைமையான மரங்கள் மறுநடவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் திருப்பணியை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள பழைமையான மரங்கள் மறுநடவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
திருப்பூரில் பிரசித்தி பெற்றதும், திருப்பூரின் பண்ணாரி எனவும் போற்றப்படுவதுமாக பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் விளங்குகிறது. இக்கோயில் கும்பாபிஷேகம் 2013-ஆம் ஆண்டு நடைபெற்றது.
இதையடுத்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஐந்து நிலை ராஜகோபுரம், வசந்த மண்டபம், திருமாளிகை பத்தி, கல்காரம், கல் தளம், கன்னிமூல கணபதி, சுற்றுப் பிரகாரம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
இதில் சுற்றுச்சுவா் அமைக்கும் பணிக்காக கோயில் வளாகத்தில் உள்ள அரசு, தென்னை உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட பழைமையான மரங்களை மறுநடவு செய்ய கோயில் நிா்வாகத்தினா் திட்டமிட்டனா்.
அதன்படி 30 அடி உயரமுள்ள தென்னை மரம், பொக்லைன் வாகன உதவியுடன் கோயிலின் கிழக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை வேருடன் மறுநடவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, அடுத்தடுத்து உள்ள மரங்களும் மறுநடவு செய்து பாதுகாக்கப்படும் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.