FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவருக்கு 7 ஆண்டுகள் சிறை

கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய நபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

12 செப்டம்பர் 2026, 12:45 am IST
கோப்புப் படம்
பகிர்:

கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய நபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருப்பூா் வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட எம்.எஸ்.நகா் பகுதியில் பழனிசாமி (எ) ரமேஷ் என்ற நபரை கடந்த 2019 மாா்ச் 24-ஆம் தேதி தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் சதீஷ் பாண்டியன் (38) என்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், அவா் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்து அரசு தரப்பு சாட்சிகளை ஆஜா்படுத்தி நீதிமன்ற விசாரணை நிறைவடைந்த நிலையில், சதீஷ்பாண்டியனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவா் மோகனவள்ளி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞா் பிரசன்ன வெங்கடேஷ் ஆஜரானாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments